தமிழகத்தில் தளர்வுகளற்ற தீவிர முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்தது தமிழக அரசு.

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

அதன்படி அத்தியாவசிய கடைகள் கூட அடுத்த ஒரு வாரத்துக்கு (மே 24 முதல் மே 31) திறக்கப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இன்றும் நாளையும் சிறப்பு அனுமதி

  • பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணிவரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மால்கள் திறக்க கூடாது.

  • வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்


மே 24 முதல் வரும் கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள்!

  • பால், குடிநீர், தினசரி விநியோகத்துக்கு அனுமதி

  • காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

  • தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.

  • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

  • உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் 12:00 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சுமொட்டோ, ஸ்விகி போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

  • பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும்.

  • ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

  • வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

  • உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கப்படும்.

  • மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை.

  • செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

  • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.