தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. 


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. 

இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நோய் பரவல் அதிகம் இருக்கும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.